இலங்கை தெற்கு கடற்பரப்பில் பலமான நில அதிர்வு!

Date:

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஓரளவு பலமான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தெற்காக 1200 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12:29 மணிக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 5.8 மெக்னிடியூட் என்ற அளவில் உணரப்பட்டதாகவும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இதன் தாக்கம் கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ, காலி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...