குர்ஆன் எரிப்பு எதிரொலி: சுவீடன் தூதரை வெளியேற்றியது ஈராக்: தூதரகம் மீதும் தாக்குதல்

Date:

ஈராக் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர்.

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்துள்ளார்.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் குர்ஆன் எரிப்பு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நேற்று ஈராக் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இந்த நிலையில் சுவீடன் தூதர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...