சவூதியால் அன்பளிப்புச் செய்த சுனாமி வீட்டுத்திட்டம்: இதுவரை கையளிக்கப்படவில்லை

Date:

சவூதி அன்பளிப்பு செய்த நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்ட விடயத்தில் அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்காது தொடர்ந்து பராமுகமாக செயற்படுகிறது என திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆத்தோடு சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறைக்காக அபகரிக்கப்பட்ட மஹர பள்ளிவாசலை புதிய இடத்தில் அமைப்பதங்கு மாற்று காணி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த வரம் இடம்பெற்ற பாராளுமன் அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் நீண்ட காலமாக பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாமல் இருக்கிறது. இந்த விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் ஊடாக அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை இன்று வரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை.

பயனாளிகளின் பாவனைக்கு இந்த வீட்டுத்திட்டம் கையளிக்கப்படாமையினால் வீட்டுத் திட்டம் பற்றைக் காடாக மாறியுள்ளது எனவும்அவர் கட்டிக்காட்டினார்.

அத்தோடு, மஹர பள்ளிவாசலை அமைக்க மாற்று காணி வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் சபையில் இம்ரான் எம்.பி வேண்டுகோள் விடுத்தார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...