சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் திணைக்களத்திற்கு!

Date:

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெஹரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் பிரகாரம் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திணைக்களம் பல வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகவும் அந்த ஒப்பந்தம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் தற்போது திணைக்களத்தின் பணிகள் குறித்து பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்த நிஷாந்த அனுருத்த வீரசிங்க, அதன் பின்னரே அந்த அதிகாரிகள் அங்கு பணிக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...