சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டது தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கண்டனம்

Date:

சுவீடன் நாட்டில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டது தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளை கடந்த மாதம் 21 ஆம் திகதி சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோன் நோபியா பள்ளிவாசலுக்கு வெளியே அல்குர்ஆனுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் அதைத் தீயிட்டுக் கொழுத்தியமையை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாக கண்டிக்கிறது.

கோடிக்கணக்கான முஸ்லிம்களின் இதயங்களைப் புண்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த இழி செயல் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

உலக முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத சுவீடன் நீதிமன்றம் இப்பாதகச் செயலை மனித உரிமைகள் என்ற வகையில் அங்கீகரித்திருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதேவேளை உலக கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தலைவர் பாப்பாண்டவர் அவர்கள் இச்செயலை கண்டித்துள்ளமையை முஸ்லிம் உலகம் மகிழ்வோடு வரவேற்கிறது.

இதுபோன்ற மத நிந்தனை விவகாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவும் இப்படியான நிகழ்வுகள் இனி நடைபெறாதிருக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உலக முஸ்லிம்களின் கோரிக்கையோடு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியும் இணைந்து கொள்கிறது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...