தாக்குதலுக்கு உள்ளாகி நபர் ஒருவர் பலி!

Date:

பாணந்துறை திக்கல சந்தியில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான நபர் பாணந்துறை தெற்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை தொட்டவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் உயிரிழந்தவருக்கும், சந்தேக நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, இறந்தவர் சந்தேகநபரை முச்சக்கரவண்டியின்  கைப்பிடியால் தாக்கியுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் பதிலுக்கு தாக்கியதை அடுத்து படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய பாணந்துறை, வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...