பயணிகள் ஒரு பக்கமாக நின்றதால் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் உயிரிழப்பு: பிலிப்பைன்ஸில் சம்பவம்!

Date:

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லகுனா ஏரியில் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை வேளையில் 70 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த படகில் 42 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றி கொண்டு சென்றதால் படகு தள்ளாடியபடி சென்றது. அப்போது பலத்த காற்று காரணமாக பயணிகள் படகின் ஒரு பக்கமாக நின்றதால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது.

இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். 40 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருகிறார்கள்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...