புத்தளத்திற்கு பெருமை தேடி தந்த உலகக்கிண்ண வீரர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!

Date:

உலக கிண்ண ஸெபக்தக்ரோ வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (18) புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய வீரர்களை  வரவேற்கும் நிகழ்வும் வீதி ஊர்வலமும் மாலை 4.00 மணி – 6.00 மணி வரை புத்தளம் நகர மத்தியில் நடைபெறும்.

Kumpulan De Malayu Puttalam மற்றும் Malay Sports Club இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இவ்வீரர்களை வரவேற்கும் நிகழ்வு சிறுவர் பூங்காவிற்கு அருகில் சமய குருக்கள், அரச மற்றும் நிருவாகத்துறை அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சர்வ மதத்தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து புத்தளம் நகர மத்தியில் ஊர்வலமாக அழைத்து வந்து, அல்-குர்ஆன் நினைவு கோபுரத்தின் முன்னால் மக்கள் சந்திப்புக் கூட்டத்துடன் நிறைவுபெறும்.

 

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...