புத்தளம் வர்த்தக நலன்புரிச் சங்கம், மாவட்ட சர்வமத அமைப்பினரின் ஹஜ் பெருநாள் சந்திப்பு

Date:

புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கம் (PUTWA)க்கும் புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு (DIRC – Puttalam)க்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 5 ஆம் திகதி புத்தளம் பெரிய பள்ளியில் நடைபெற்றது.

புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தில் இந்து, கத்தோலிக்க, பௌத்த, இஸ்லாம் சமயத்தவர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

எனவே, எமது அங்கத்தவர்களின் சமயங்களில் சிறப்பான தினமொன்றை அனுஷ்டித்தல் என்ற தீர்மானத்தின் பிரகாரம் ஜூன் 29 ஆம் திகதி இடம்பெற்ற இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாளை அனுஷ்டிக்கும் நோக்கத்துடன் இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சர்வ மத வர்த்தகர் சந்திப்பில் கத்தோலிக்க பாதிரி யொஹான் தேவராஜா, ரத்திணராஜா ரத்திணமலர், மலர் லுவிஸ் கன்னியாஸ்திரிகள், இந்து குருக்களான சிவ ஸ்ரீ பாலநாத், சிவ ஸ்ரீ சுவீகர குருக்கள், மௌலவிமார்களான அஷ்ஷெய்க் முஜீப் ஸாலிஹ், அஷ்ஷெய்க் ஷிஹான் யூசுபீ ஆகியோர் கலந்துகொண்டதுடன் நல்லுபதேசங்களையும் வழங்கினார்கள்.

PUTWA மற்றும் DIRC – Puttalam நிருவாகத்தினரும் உறுப்பினர்களும் கலந்துகொண்ட இச்சந்திப்பில், PUTWA தலைவர் Y.M. நிஸ்தாத் வரவேற்புரையை நிகழ்த்தியதோடு, அதன் கூட்டுனர் ஹிஷாம் ஹுஸைன் இச்சந்திப்பின் நோக்கத்தையும் விவரித்தார்.

இதேவேளை நிகழ்ச்சியின் முடிவில் கலந்துகொண்டோருக்கு பெருநாள் பலகார விருந்தும் வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...