‘பேராதனை வைத்தியசாலையில் மர்மமாக உயிரிழந்த பெண்: விசாரணை நடத்த ஐவர் அடங்கிய குழு!

Date:

பேராதனை போதனா வைத்தியசாலையில் சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஐந்து விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய இந்த குழு நாளை சனிக்கிழமை பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இரசாயன பகுப்பாய்வு விசாரணையின் ஊடாக விசாரணைக்குழு அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி போடப்பட்ட 12 பேர் தற்போது பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாமோதி சந்தீபனி என்ற யுவதி வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த திங்கட்கிழமை கட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் அன்றிரவு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருந்ததார்.

இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயார்களுக்கு ஏற்படுள்ள ஒவ்வாமையால் உடனடியாக இங்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் பிரகாரம் இவ்வாறு ஐவர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...