‘பேராதனை வைத்தியசாலையில் மர்மமாக உயிரிழந்த பெண்: விசாரணை நடத்த ஐவர் அடங்கிய குழு!

Date:

பேராதனை போதனா வைத்தியசாலையில் சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஐந்து விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய இந்த குழு நாளை சனிக்கிழமை பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இரசாயன பகுப்பாய்வு விசாரணையின் ஊடாக விசாரணைக்குழு அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி போடப்பட்ட 12 பேர் தற்போது பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாமோதி சந்தீபனி என்ற யுவதி வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த திங்கட்கிழமை கட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் அன்றிரவு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருந்ததார்.

இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயார்களுக்கு ஏற்படுள்ள ஒவ்வாமையால் உடனடியாக இங்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் பிரகாரம் இவ்வாறு ஐவர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...