‘பேராதனை வைத்தியசாலையில் மர்மமாக உயிரிழந்த பெண்: விசாரணை நடத்த ஐவர் அடங்கிய குழு!

Date:

பேராதனை போதனா வைத்தியசாலையில் சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஐந்து விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய இந்த குழு நாளை சனிக்கிழமை பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இரசாயன பகுப்பாய்வு விசாரணையின் ஊடாக விசாரணைக்குழு அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி போடப்பட்ட 12 பேர் தற்போது பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாமோதி சந்தீபனி என்ற யுவதி வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த திங்கட்கிழமை கட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் அன்றிரவு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருந்ததார்.

இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயார்களுக்கு ஏற்படுள்ள ஒவ்வாமையால் உடனடியாக இங்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் பிரகாரம் இவ்வாறு ஐவர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...