மட்டக்குளி பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்: பயணிகள் பாரிய சிரமத்தில்!

Date:

மட்டக்குளியிலிருந்து கங்காராம நோக்கி பயணிக்கும் 145ம் வீதி இலக்க பஸ் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

போபிட்டிய – புறக்கோட்டைக்கு இடையிலான பஸ், தமது பயணிகளையும் ஏற்றி செல்வதனால், தமது வருமானம் ஈழக்கப்படுவதாக தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த வீதியூடாக பயணித்த 155ம் வீதி இலக்க பஸ்கள் கொவிட் காலத்திற்கு பின்னர் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளமையினால், இந்த வீதியூடாக 145ம் வீதி இலக்க பஸ்கள் மாத்திரமே பயணிக்கின்றன.

இதனால், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். தமக்கான போக்குவரத்தை உறுதி செய்ய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...