மட்டக்குளி பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்: பயணிகள் பாரிய சிரமத்தில்!

Date:

மட்டக்குளியிலிருந்து கங்காராம நோக்கி பயணிக்கும் 145ம் வீதி இலக்க பஸ் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

போபிட்டிய – புறக்கோட்டைக்கு இடையிலான பஸ், தமது பயணிகளையும் ஏற்றி செல்வதனால், தமது வருமானம் ஈழக்கப்படுவதாக தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த வீதியூடாக பயணித்த 155ம் வீதி இலக்க பஸ்கள் கொவிட் காலத்திற்கு பின்னர் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளமையினால், இந்த வீதியூடாக 145ம் வீதி இலக்க பஸ்கள் மாத்திரமே பயணிக்கின்றன.

இதனால், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். தமக்கான போக்குவரத்தை உறுதி செய்ய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...