யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் அவர்களை பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடருவதால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து அகதிகளாகத் தொடர்ந்து தனுஷ்கோடி சென்ற வண்ணம் உள்ள நிலையில், இன்று சனிக்கிழமை காலை தனுஷ்கோடிக்கு 8 பேர் அகதிகளாக சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும பொலிஸ் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் அங்கு சென்ற பொலிஸார் குறித்த 8 பேரையும் பாதுகாப்புடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை அகதிகள் முகாமில் உள்ள அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...