லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளில் மாற்றம் !

Date:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ் தெரிவித்தார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை மாற்றத்திற்கு அமையவே லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் குறித்த எரிபொருள் வகைகளின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...