வழிகாட்டல்கள் சரியாக அமைந்தால் திரிபோஷாவை தொடர்ந்து வழங்க முடியும்!

Date:

திரிபோஷா தொடர்பான வழிகாட்டுதல்கள் சரியாக அமைக்கப்பட்டால், 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு அதை வழங்க முடியும் என இலங்கை உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ வழிகாட்டுதல்கள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், சுகாதார அமைச்சுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் இதில், சரியான பதில்களோ தீர்வுகளோ கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சுகாதார அமைச்சினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அதற்கான தீர்வும் வழங்கப்படவில்லை என தலைவர் கூறுகிறார்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ தொடர்ந்து வழங்கப்படும் என குலரத்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனமும் தனியார் துறை நிறுவனமும் திரிபோஷ உற்பத்திக்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா திரிபோஷ லிமிடெட் தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கு திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான சோளம் மற்றும் சோயாபீன்களை உலக உணவு ஸ்தாபனம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...