வழிகாட்டல்கள் சரியாக அமைந்தால் திரிபோஷாவை தொடர்ந்து வழங்க முடியும்!

Date:

திரிபோஷா தொடர்பான வழிகாட்டுதல்கள் சரியாக அமைக்கப்பட்டால், 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு அதை வழங்க முடியும் என இலங்கை உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ வழிகாட்டுதல்கள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், சுகாதார அமைச்சுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் இதில், சரியான பதில்களோ தீர்வுகளோ கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சுகாதார அமைச்சினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அதற்கான தீர்வும் வழங்கப்படவில்லை என தலைவர் கூறுகிறார்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ தொடர்ந்து வழங்கப்படும் என குலரத்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனமும் தனியார் துறை நிறுவனமும் திரிபோஷ உற்பத்திக்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா திரிபோஷ லிமிடெட் தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கு திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான சோளம் மற்றும் சோயாபீன்களை உலக உணவு ஸ்தாபனம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...