ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்த இலங்கை வீராங்கனை தருஷி!

Date:

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

24ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், போட்டியின் நான்காவது நாளான இன்று பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

தருஷி கருணாரத்ன, 800 மீற்றர் போட்டித் தூரத்தை 2.00.66 நிமிடங்களில் நிறைவு செய்து புதிய ஆசிய சாதனையை தன்வசமாக்கினார்.

இதேவேளை இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...