ஆற்றில் விழுந்து காணாமல் போன கொழும்பு யுவதி

Date:

திஹாரிய பிரதேசத்தில் அந்தககல்ல ஓய ஆற்றின் படித்துறைக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 21 வயதான யுவதி கால் வழுக்கி ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு வாழைத்தோட்டம் குணசிங்கபுர பிரதேசத்தை சேர்ந்த யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன யுவதி தனது இரண்டு தோழிகளுடன் திஹாரிய பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளதுடன் தோழிகளுடன் அந்தகல்ல ஓயாவுக்கு சென்றுள்ளார்.

அப்போது ஆற்றின்படித்துறையில் நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்த போது கால் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸார், கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேவாசிகள் காணாமல் போன யுவதியை தேடி வருகின்றனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...