இலங்கையில் 13ஐ அமுல்படுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்!

Date:

இலங்கையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார்.

இந்நிலையிலேயே கே.எஸ்.அழகிரி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இலங்கை–இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இவ்வாண்டுடன் 36 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

தற்போது வரையில் அதிலுள்ள பல்வேறு முக்கிய விடயங்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சதிப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் 13இல் பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருந்தார். இருப்பினும் இதனை தமிழ் கட்சிகள் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...