கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 4000 வீடுகள்!

Date:

கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்காக 6 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு கே மாவத்தை, ஸ்டேடியம் தோட்டம், அப்பல்வத்தை, பெர்குசன் வீதி, ஒபேசேகரபுர மற்றும் மாதம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் இந்த வீட்டுத் தொகுதிகளை நிர்மாணித்து வரும் நகர அபிவிருத்தி அதிகார சபை, ஒரு வீடமைப்பு 550 சதுர அடி எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியின் அனுசரணையில் இந்த வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...