தமிழ்கட்சி உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் இன்று சந்திப்பு

Date:

தமிழ்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரா.சம்பந்தனுடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, இலங்கை தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள், தேசிய அடையாளங்கள், சீர்திருத்தங்கள், பொறுப்பு கூறல் மற்றும் நீதிக்கான விடயங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்காக முன்னோக்கி பயணித்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...