நஷ்டத்தில் இயங்கும் பேருந்து டிப்போக்கள் மூடப்படும்

Date:

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இலாபம் பெறும் நிலைமையை அடையாத இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து பேருந்து டிப்போக்களும் மூடப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இலங்கையில் உள்ள போக்குவரத்து சபைகளின் சகல பேருந்து டிப்போக்களும் இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இலங்கையில் தற்போது 119 பேருந்து டிப்போக்கள் இருக்கின்றன. அவற்றில் 39 பேருந்து சாலைகள் மாத்திரமே இலாபத்தில் இயங்கி வருகின்றன.

38 பேருந்து டிப்போக்கள் நஷ்டமும் இலாபமும் இன்றி இயங்கி வருகின்றன.

இதனால், தற்பொழுது நஷ்டத்தில் இயங்கும் பேருந்து டிப்போக்கள் இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...