அக்கரைப்பற்று மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!

Date:

ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பூகொட, கிரிந்திவல, ரன்பொகுனுகம வீடமைப்புத் தொகுதி, வத்துபிட்டிவல, மாஹிம்புல, மதுவெகெதர, ஊராபொல மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...