புத்தளத்திற்கு பெருமை தேடி தந்த உலகக்கிண்ண வீரர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!

Date:

உலக கிண்ண ஸெபக்தக்ரோ வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (18) புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய வீரர்களை  வரவேற்கும் நிகழ்வும் வீதி ஊர்வலமும் மாலை 4.00 மணி – 6.00 மணி வரை புத்தளம் நகர மத்தியில் நடைபெறும்.

Kumpulan De Malayu Puttalam மற்றும் Malay Sports Club இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இவ்வீரர்களை வரவேற்கும் நிகழ்வு சிறுவர் பூங்காவிற்கு அருகில் சமய குருக்கள், அரச மற்றும் நிருவாகத்துறை அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சர்வ மதத்தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து புத்தளம் நகர மத்தியில் ஊர்வலமாக அழைத்து வந்து, அல்-குர்ஆன் நினைவு கோபுரத்தின் முன்னால் மக்கள் சந்திப்புக் கூட்டத்துடன் நிறைவுபெறும்.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...