மனித உரிமை மீறல்களுக்காக ஐந்து நாடுகளுக்கு தடைவிதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்

Date:

மனித உரிமை மீறல்களுக்காக ரஸ்யா, உக்ரைன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது தடைகள் விதிக்கப்பட்டடுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஆப்கானிஸ்தான், தென்சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ரஸ்யா, உக்ரைன் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளை சேர்ந்த 18 பேருக்கும் 5 நிறுவனங்களுக்கும் எதிராகவும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் பாலியல் மற்றும் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கு எதிராக தடைவிதிக்கபட்ட அறுவரில் தலிபான்களின் கல்வி மற்றும் நீதி அமைச்சர்களும் ஆப்பாகானிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் நீதியரசரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, ரஸ்யாவை சேர்ந்த 12 பேருக்கு எதிராகவும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.

ரஸ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க கொத்து குண்டுகளை உக்ரைன் பயன்படுத்துவதை வெள்ளை மாளிகை அண்மையில் உறுதிசெய்திருந்தது.

ரஸ்ய படைகளால் பாதுகாக்கப்படுபவை மீதும் அவற்றின் நடவடிக்கைகள் மீதும் இந்த குண்டுகள் திறம்பட பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிருபை தெரிவித்துள்ளார்.

கொத்து குண்டு என்பது பலதரப்பட்ட குண்டுகளால் இணைந்துள்ளதுடன், அது வெடிக்கும் போது பாரிய பரப்புக்கு சேதங்களை ஏற்படுத்தி வெடிக்கும் வல்லமை கொண்டது.

இந்த குண்டுகளால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு நூற்றுக்கும் அதிகமான நாடுகள் அதனை தடைசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யுக்ரைனின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் நோக்கில் கொத்துக்குண்டுகளை அந்நாட்டுக்கு வழங்க அமெரிக்க இணங்கியிருந்தது.

இந்த குண்டுகளை ரஸ்ய வீரர்களின் செரிவை குறைக்கும் விதமாக பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் உறுதியளித்திருந்தது.

மேலும், கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்த போது பொது மக்கள் வாழும் பகுதிகள் உள்ளிட்டவற்றை ரஸ்யா கொத்து குண்டுகளை வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...