மாத இறுதியில் பணவீக்கம் 7 வீதமாக குறையும் : மத்திய வங்கி ஆளுநர்!

Date:

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த மாத இறுதியில் பணவீக்கம் ஒற்றை இலக்கமாக குறையும். குறிப்பாக 7% ஆக குறைய வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கடுமையான பணவீக்க அதிகரிப்பு கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல குறைந்துவரும் பின்புலத்தில் நாட்டில் பொருளாதார நிலைமைகளும் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்துவருகிறது.

மத்திய வங்கியும் அரசாங்கமும் இணைந்து எடுத்த பல முக்கிய தீர்மானங்களால் இதனை சாத்தியப்படுத்த முடிந்துள்ளது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய வங்கிச் சட்டத்தின் ஊடாக மத்திய வங்கியால் இனி சுயாதீனமான தீர்மானங்களை எடுக்க முடியும்.

இதன் ஊடாக பொருளாதாரம் மீள்வது துரிதமாகும். அடைந்துக்கொள்ள வேண்டிய பொருளாதார இலக்குகளுக்கு இந்தச் சட்டமூலம் பயனுடையதாக இருக்கும்.

நாம் இன்னமும் பொருளாதார ரீதியாக ஸ்திரமடைய வேண்டியுள்ளது. அதேபோன்று கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகளும் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...