லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளில் மாற்றம் !

Date:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ் தெரிவித்தார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை மாற்றத்திற்கு அமையவே லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் குறித்த எரிபொருள் வகைகளின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...