வழிகாட்டல்கள் சரியாக அமைந்தால் திரிபோஷாவை தொடர்ந்து வழங்க முடியும்!

Date:

திரிபோஷா தொடர்பான வழிகாட்டுதல்கள் சரியாக அமைக்கப்பட்டால், 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு அதை வழங்க முடியும் என இலங்கை உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ வழிகாட்டுதல்கள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், சுகாதார அமைச்சுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் இதில், சரியான பதில்களோ தீர்வுகளோ கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சுகாதார அமைச்சினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அதற்கான தீர்வும் வழங்கப்படவில்லை என தலைவர் கூறுகிறார்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ தொடர்ந்து வழங்கப்படும் என குலரத்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனமும் தனியார் துறை நிறுவனமும் திரிபோஷ உற்பத்திக்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா திரிபோஷ லிமிடெட் தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கு திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான சோளம் மற்றும் சோயாபீன்களை உலக உணவு ஸ்தாபனம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...