விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலையில் 263 பாலங்கள்: வீதி அபிவிருத்தி அதிகார சபை

Date:

நாட்டிலுள்ள பிரதான வீதிகளில் விஸ்தரிக்கப்பட வேண்டிய 263 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த பாலங்களை விரிவுபடுத்துவதற்காக 15.3 பில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்துள்ளார்.

இதுதவிர சேதமடைந்த நிலையில் காணப்படும் 135 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றை புனரமைக்க 12.3 மில்லியன் ரூபா தேவைப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட வேண்டிய பாலங்களுக்கான நிதியை விரைவாக வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நிதி கிடைத்தவுடன் பாலங்களின் புனரமைப்பு பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பொலன்னறுவை – மன்னம்பிட்டி பாலத்தில் இருந்து பஸ்ஸொன்று ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன் 40-இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...