ஆங்கில கற்கைநெறியை நிறைவுசெய்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

Date:

தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கில கற்கைநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இவர்களுக்கு கற்கைநெறி வெற்றிகரமாக முடித்தமைக்கான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசியப்பட்டியலில் தெரிவான எம்.பி ஒருவர், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.பி., மற்றும் காலி, குருநாகல், மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்களே இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.

ஆரம்பத்தில் 15 எம்.பி.க்கள் ஆங்கிலப் பாடநெறியை கற்க பதிவுசெய்திருந்த போதிலும் இறுதியில் ஐந்து பேர் மாத்திரமே பயிற்சியை நிறைவுசெய்துள்ளனர்.

எம்.பி.க்களின் வசதிக்காக பாராளுமன்ற அமர்வு நாட்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதுடன், எம்.பி.க்கள் தவிர, 42 பாராளுமன்ற ஊழியர்களும் ஆங்கில மொழி பாடத்தை கற்றுள்ளனர்.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...