ஆங்கில கற்கைநெறியை நிறைவுசெய்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

Date:

தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கில கற்கைநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இவர்களுக்கு கற்கைநெறி வெற்றிகரமாக முடித்தமைக்கான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசியப்பட்டியலில் தெரிவான எம்.பி ஒருவர், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.பி., மற்றும் காலி, குருநாகல், மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்களே இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.

ஆரம்பத்தில் 15 எம்.பி.க்கள் ஆங்கிலப் பாடநெறியை கற்க பதிவுசெய்திருந்த போதிலும் இறுதியில் ஐந்து பேர் மாத்திரமே பயிற்சியை நிறைவுசெய்துள்ளனர்.

எம்.பி.க்களின் வசதிக்காக பாராளுமன்ற அமர்வு நாட்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதுடன், எம்.பி.க்கள் தவிர, 42 பாராளுமன்ற ஊழியர்களும் ஆங்கில மொழி பாடத்தை கற்றுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...