இனவாதத்தை காற்றில் பறக்க விட்ட சந்திரயான்: சந்திரயானின் வெற்றிக்குப் பங்களித்த ஜாமிஆ மில்லியா இஸ்லாமியாவின் இந்து, முஸ்லிம் மாணவர்கள்

Date:

இந்தியா புது டில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரியில் கல்வி கற்று பட்டம் பெற்ற பட்டதாரிகளான அமித் குமார் பரத்வாஜ், முகமது காஷிஃப் மற்றும் அரீப் அகமது ஆகியோர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) சந்திரயான்-3 திட்டதிற்கு பங்களிப்ப செய்துள்ளமை தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக கல்லூரியின் உப பீடாதிபதி ஜனாபா பேராசிரியை நஜ்மா அக்தார் தெரிவித்துள்ளார்.

‘இந்த வரலாற்று வெற்றியின் மூலம், சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா ஆனது’ என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

மேற்படி மாணவர்கள் மூவரும் 2019 ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் இயந்திர விஞ்ஞான பீடத்தில் பொறியில் விஞ்ஞானத் துறைக்கான தமது பட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அதே ஆண்டில் ஆட்சேர்ப்பிற்காக Isro நடாத்திய பரீட்சையில் பங்கேற்று சித்தி அடைந்ததன் பின் அவ்வமைப்பில் பணிக்காக மூவரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

மேற்படி சாதனைக்காக இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி அவர்களுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்தக் கொண்ட உப பீடாதிபதியவர்கள் தமது மாணவர்களின் பங்கெற்பானது இதை விட பாரிய சாதனைகளை செய்வதற்காக ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் ஏனைய மாணவர்களை ஊக்குவிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...