இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உலகின் மிகப்பெரிய கேபிபரா எலிகள்! விரைவில் மக்கள் பார்வைக்கு

Date:

ஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து இலங்கைக்கு உலகின் மிகப்பெரிய எலி இனங்களில் ஒன்றான இரண்டு ஜோடி கேபிபராக்கள் (Capybara)அண்மையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த எலிகள் தொடர்பில் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் விலங்குகள் தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டும் என அவர் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கொறித்து உண்ணும் உயிரினங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த விலங்குகள் மிகவும் நட்புடன் இருப்பதாகவும், விலங்கு பரிமாற்றத் திட்டத்தின்படி, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு அவை கிடைக்கப்பெற்றன என குறிப்பிட்டார்.

தண்ணீருக்கு அருகில் வசிக்கும் இந்த கேபிபரா தனது சுவாசத்தை நீருக்கடியில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கும் திறன் கொண்டது என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

கேபிபராஸ் தாவரவகைகளை விரும்பி உணவாக எடுத்துக்கொள்கின்றன. இவை குழுக்களாக வாழ விரும்புகின்றன. ஒரு மாத தனிமைப்படுத்தப்பட்ட காலம் தற்போது முடிவடைந்துள்ளது. ஆகவே, இன்னும் சில நாட்களில் அவை மக்கள் பார்வைக்காக காட்டப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...