இலங்கையில் முதன்முறையாக பூமிக்கு அடியில் அமைந்த உணவகம் !

Date:

இலங்கையில் முதன்முறையாக பூமிக்கு அடியில் 124 மீற்றர் (410 அடி ஆழத்தில் அமைந்த போகல கிராபைட் சுரங்க உணவகம் பார்வையாளர்களுக்கு பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவதாக போகல கிராபைட் சுரங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார்.

1865 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போகலா கிராபைட் சுரங்கமானது உயர்தர கிராஃபைட் ஏற்றுமதி மூலம் உலகில் உயர்ந்த நற்பெயரைப் பெற்றுள்ளது.

ஜேர்மனி, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கிராஃபைட்டை ஏற்றுமதி செய்து இந்நாட்டுக்கு அதிக அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் தனித்துவமான தொழிற்சாலையாக இது காணப்படுகிறது.

போகல கிராஃபைட் சுரங்கத்தின் தற்போதைய ஆழம் 476 மீட்டர். 1585 அடி. இங்கு 124 மீட்டர் (410 அடி) ஆழத்தில் நிலத்தடி அமைக்கப்பட்டுள்ளது . இது இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது நிலத்தடி உணவகம் என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார்.

இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் பதினைந்து பேர் அமர்ந்து அங்கு செய்யப்படும் உணவு மற்றும் பானங்களை உண்ண முடியும்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...