ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட வாள்கள், வெடிகுண்டு துண்டுகள், ஈட்டி ஆயுதங்கள் ஆகியவை நீதிமன்ற உத்தரவுப்படி ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

கடற்படை அதிகாரிகளுடன் சுரனிமலை கடற்படை அதிகாரிகள், 1000 கடல் மைல் தொலைவிலும், 1000 அடி ஆழத்திலும் ஆழ்கடலில் இந்த ஆயுதக் குவியலை மூழ்கடித்து அழித்துள்ளனர்.

பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸீன் உத்தரவுக்கமைய, மேலதிக நீதவான் பசன் அமரசிங்க, நீதிமன்ற பதிவாளர், வழக்குகளின் பாதுகாவலர் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த ஆயுதத் தொகையை மூழ்கடித்து அழித்துள்ளனர்.

இதன் மூலம் 1000 வாள்கள், கத்திகள், நுனி ஆயுதங்கள், வெடிகுண்டு பாகங்கள், 08 துப்பாக்கிகள் மற்றும் 10 கல்கட்டாஸ் ரக துப்பாக்கிகள் அழிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...