உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் உயர்வு: விவசாய அமைச்சர்

Date:

நாட்டில் பால் கைத்தொழில் வீழ்ச்சியடைந்த போதிலும், உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் அதிகரித்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடந்த ஆறு மாதங்களில் தேசிய கால்நடை மேம்பாட்டு சபை பால் உற்பத்தியை 2,599,617 லீட்டராக அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 30 வீத அதிகரிப்பு என பால் உற்பத்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போது, ​​இலங்கையின் பால் உற்பத்தி 35-40 சதவீதமாக உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்குத் தேவையான திரவப் பால் உற்பத்தியில் 50 வீதத்தை நாட்டிலேயே உற்பத்தி செய்வதே  அரசாங்கத்தின் நோக்காகும்.

இந்நிலையில்,நாட்டில் திரவ பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால்,பால் மா இறக்குமதியை நிறுத்துமாறு இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நாட்டுக்குத் தேவையான பாலில் 60 வீதம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் இருந்து பெறப்படுகிறது.

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...