ஏறாவூரில் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று அனுஷ்டிப்பு!

Date:

1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ம் திகதி தமீழீழ விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லீம்களை நினைவுகூறும் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்படுகிறது.

பொதுச்சந்தை,வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு நூறுஸ்ஸலாம் பள்ளிவாயலில் துஆ பிராத்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டு அமைதிப் பேரணியும் இடம்பெற்றதுடன் நிகழ்வின் முடிவில் ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களிடம் சுஹதாக்கள் நினைவுப் பேரவையினால் மஹஜர் ஒன்றும் நகரசபை வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள்,உலமாக்கள்,கல்விமான்கள், ஊர்பிரமுகர்கள்,மத்ரஸா மாணவர்கள் என பெருந்திரளான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உமர் அறபாத்

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...