கொழும்பில் இடம்பெற்ற “ஹிஜ்ரத் சிறப்புக் கவியரங்கம்”!

Date:

தாருல் ஈமான் இலக்கிய வட்டம் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொழும்புப் பிராந்தியம் இணைந்து ஏற்பாடு செய்த “ஹிஜ்ரத் சிறப்புக் கவியரங்கம்” 15.08.2023 அன்று கொழும்பு மருதானை தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி Faris Saly அவர்கள் வரவேற்பு கவிதையுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி Imthiyaz Rasheed M தலைமை வகித்து கவி பாட அவருடன் கவிஞர் Rauf Hazeer, கவிஞர் Gazzaly Ashshums, கவிஞர் Abdul Raheem Mohammdu Farveen மற்றும் கவிஞர் Marikkar Sacp ஆகியோரும் இணைந்து ஹிஜ்ரத் கவி பாடினர். அத்துடன் நளீர் நஸீர் நளீமியின் பாடலும் இடம்பெற்றது.

தாருல் ஈமான் இலக்கிய வட்டத்தின் தலைவர் தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் M.H.M. ஹஸன் அவர்கள் முடிவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வை அஷ்ஷெய்க் அஸ்ஹர் சாதித் நளீமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இஸ்லாமிய உலகின் முதல் கவிஞரான நபித் தோழர் “ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரழி)” அவர்களை நினைவுகூறும் வகையில் ஹஸ்ஸான் பின் ஸாபித் அரங்கம் என பெயர்சூட்டப்பட்ட அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் இலக்கியவாதிகள், கவிஞர்கள், மார்க்கத் தலைவர்கள், ஆர்வலர்கள், ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...