சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வை இழந்த 18 பேரிடம் விசாரணை!

Date:

நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களிடம் சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 18 பேர் சத்திரசிகிச்சையின் பின்னர் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக வைத்திய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இக்குழுவினர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களிடம் கலந்துரையாடி விசாரணை அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் ஆர்.எம்.எஸ்.கே.ரட்ணாயக்க, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் மகேந்திர செனவிரத்ன உட்பட்ட குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட 18 பேருக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளுமாறு அறிவித்திருந்த போதிலும் 16 பேர் மாத்திரமே கலந்து கொண்டனர்.

இதுதொடர்பில் விரிவாக விசாரணைகளை மேற்கொண்டதாகவும் இதன்போது அவர்களுடைய குடும்ப விவரம், வருமானம் உட்பட அனைத்து விடயங்களும் கேட்டறியப்பட்டு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு அந்த அறிக்கை பாதிக்கப்பட்டவர்களிடம் வாசித்து தெளிவுபடுத்திய பின்னர் அவர்களிடம் கையொப்பமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...