கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி!

Date:

சில கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தியர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, விடுமுறைக்கான காரணம், விடுமுறையில் செல்லும் காலப்பகுதி மற்றும் அவ்வாறு விடுமுறை பெற்ற வைத்தியருக்கான மாற்றீடு என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில துறைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் வெளிநாடுகளுக்கு சென்ற வைத்தியர்கள் மீள நாடு திரும்பாமை உள்ளிட்ட காரணங்களினால் வைத்தியசாலைகள் சிலவற்றின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

இந்தநிலையில் சுகாதார அமைச்சு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதேநேரம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகிய தரப்பினருக்கு இடையே அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...