சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Date:

ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 5,6,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கட்டாயம் பாராளுமன்ற அமர்வில் சமூகமளிக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

6,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வர வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வட்ஸ் அப் மற்றும் தொலைபேசிகளுக்கு தகவலை அனுப்பி நிலைமையை விளக்கியுள்ளது.

மேலும் வெளிநாடு அல்லது கொழும்புக்கு வெளியில் செல்வதை இந்த திகதிகளில் தவிர்க்குமாறும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...