மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த மாணவி: நீதிமன்றத்தின் உத்தரவு

Date:

மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கெக்கிராவ நீதவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், மாணவி தொடர்பில் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த 14 வயது மாணவி தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

குறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலைக்கு முன்பதாக போக்குவரத்து கடமையில் ஈடுக்கப்பட்டிருந்த பொலிஸார் மாணவி மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளிப்பதை கண்டறிந்துள்ளனர்.

பொலிஸாரின் தற்போதைய விசாரணையில் மாணவியின் தாயின் இரண்டாவது கணவரின் தந்தையே இவ்வாறு மது அருந்துவதற்கு பழக்கப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...