மத்திய வங்கிக்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த 10 பேர் பிணையில் விடுதலை

Date:

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா பிணை வழங்கப்பட்டதுடன் இந்த குழு அரசு கட்டிடங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பொலிஸாரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் நேற்று காலை பலர் நுழைய முற்பட்டதையடுத்து, கொழும்பு கோட்டையில் கடும் பதற்றமான சூழல் நிலவியது.

குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோரின் கூட்டு சங்கத்தின் உறுப்பினர்களாக தங்களை அடையாளப்படுத்திய குழு, தங்களின் குத்தகை வசதி பிரச்சினைகள் தொடர்பான சலுகைகளை கோரி வந்திருந்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...