மிருகக்காட்சிசாலையில் விலங்குகளை குளிர்ச்சியாக வைக்க மழை..!

Date:

தற்போது நிலவும் வரட்சியின் காரணமாக தெஹிவளை விலங்கியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் இயல்பு வாழ்க்கை அசௌகரியமாகியுள்ளது.

வரட்சியிலிருந்து விலங்குகளை பாதுகாக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

சிம்பன்சிகள், வங்கப்புலிகள், ஜாகுவார், கரடிகள் மற்றும் பல விலங்குகளின் கூண்டகளில் மழை போன்று தண்ணீரை பொழிய வைக்கும் குழாய்கள் மற்றும் ஸ்பிரிங்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விலங்குகள் தங்கள் உடல் வெப்பநிலையை சீராக்க இந்த மழையின் கீழ் தங்குமிடம் தேடுவதை அடிக்கடி காணலாம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அங்குள்ள குளங்கள் பணியாட்களால் நிரப்பப்படுவதாகவும் இதனால் , மிருகக்காட்சிசாலையில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை.

“விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எனினும் விலங்குகளின் நீர் உட்கொள்ளல் அதிகரித்துள்ளது. மேலும் சில பறவைகளுக்கு குளிர்ச்சியான காற்று வழங்குவதற்காக மின்விசிறிகள் மற்றும் ஸ்பிரிங்லர்களை நிறுவியுள்ளோம் என்றும் பிரேமகாந்த கூறினார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...