மீண்டும் மக்களவை உறுப்பினர் ஆனார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

Date:

‘மோடி’ குடும்பப்பெயர் குறித்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்ததையடுத்து, மக்களவைச் செயலகம் திங்கட்கிழமை அவருக்கு உறுப்பினர் பதவியை மீண்டும் அளித்தது.

மார்ச் 2023 இல் அவர் கீழவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், ராகுல் காந்தி  மீண்டும் எம்.பி. ஆகிறார்.

2019 ஆம் ஆண்டு ‘மோடியின் குடும்பப்பெயர்’  குறித்த அவதூறு வழக்கில் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு நிவாரணம் வழங்கியது நீதிமன்றம்.

முன்னதாக, ‘மோடியின் குடும்பப்பெயர் குறித்த வழக்கில்’ உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு மக்களவை எம்.பி.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

‘மோடி குடும்பப்பெயர் குறித்த வழக்கில்’ உச்ச நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பப் போவதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...