முதியோர், ஊனமுற்றோர்,சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் தொடரும்

Date:

புதிய திட்டம் தயாரிக்கப்படும் வரை முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் உட்பட 647,683 பேர் தொடர்ந்தும் கொடுப்பனவைப் பெறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அவர்களில் 41,119 சிறுநீரக நோயாளிகள், 88,602 ஊனமுற்றோர் மற்றும் 517,962 பேர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

எதிர்வரும் நாட்களில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, முதியோர் கொடுப்பனவுகள் தபால் நிலையங்களில் இருந்தும், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்படும்.

Popular

More like this
Related

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...