‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டதிற்கு 6.7 மில்.ரூபாயை நன்கொடையாக வழங்கிய கிரிக்கெட் சபை

Date:

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இதுவரை நடைபெற்ற 20 போட்டிகளில் 6.7 மில்லியன் ரூபாய் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டதிற்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த போட்டியில் 497 பவுண்டரிகள் , 185 சிக்ஸர்கள் மற்றும் 1802 ஓட்டமற்ற பந்துகளால் இந்த பணத் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் தொகை முழுவதையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டத்திற்கு வழங்கவுள்ளது.

போட்டியில் ஒவ்வொரு பவுண்டரிகளுக்கும் 4000 ரூபாயும் ஒவ்வொரு ஆறு மதிப்பெண்களுக்கும் 6000 ரூபாயும் மற்றும் ஒவ்வொரு நிலக்குனு பந்துக்கும் மற்றும் ஒவ்வொரு ஓட்டமற்ற பந்துகளுக்கும் 2000 ரூபாயும் நன்கொடையாக வழங்கப்படும்.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘இதயம் மற்றும் பராமரிப்பு வளாகம்’ கட்டுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இது அமைக்கப்பட்டவுடன் , பிறவி இதய நோய் (CHD) மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.

மேலும், LPL போட்டிகளில் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ நிதிக்கு இலங்கை கிரிக்கெட் சபை வழங்க உள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...