அந்நியச் செலாவணியை உருவாக்கக்கூடிய தொழிலாக சுதேச மருத்துவத் துறையை மேம்படுத்த நடவடிக்கை!

Date:

சுதேச மருத்துவத் துறையை அந்நியச் செலாவணியை உருவாக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட ஒரு தொழிலாக மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு கூட்டுப் பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆரோக்கியமான சனத்தொகையைக் கட்டியெழுப்புவதற்காகவும், சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் சுதேச மருத்துவ முறையிலும் ஆயுர்வேத முறையிலும் பல புதிய போக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த காலகட்டத்தை சுதேச மருத்துவத்துறையில் புத்துயிர் பெற்ற சகாப்தமாக குறிப்பிடலாம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில், கடந்த காலங்களில் நாங்கள் விரிவான பணிகளைச் செய்துள்ளோம்.

நம் நாட்டில் சுதேச மருத்துவ சேவை என்பது தரமான மருத்துவ சேவையாக காலம் காலமாக இருந்து வருகிறது. அதற்கு அப்பால் சுதேச மருத்துவத்துறையை வர்த்தக பெறுமதியுடன் கூடிய அந்நிய செலாவணியை உருவாக்கக்கூடிய ஒரு தொழிலாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை சுதேச மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து தற்போது ஆரம்பித்துள்ளன.

Popular

More like this
Related

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...