இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உலகின் மிகப்பெரிய கேபிபரா எலிகள்! விரைவில் மக்கள் பார்வைக்கு

Date:

ஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து இலங்கைக்கு உலகின் மிகப்பெரிய எலி இனங்களில் ஒன்றான இரண்டு ஜோடி கேபிபராக்கள் (Capybara)அண்மையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த எலிகள் தொடர்பில் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் விலங்குகள் தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டும் என அவர் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கொறித்து உண்ணும் உயிரினங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த விலங்குகள் மிகவும் நட்புடன் இருப்பதாகவும், விலங்கு பரிமாற்றத் திட்டத்தின்படி, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு அவை கிடைக்கப்பெற்றன என குறிப்பிட்டார்.

தண்ணீருக்கு அருகில் வசிக்கும் இந்த கேபிபரா தனது சுவாசத்தை நீருக்கடியில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கும் திறன் கொண்டது என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

கேபிபராஸ் தாவரவகைகளை விரும்பி உணவாக எடுத்துக்கொள்கின்றன. இவை குழுக்களாக வாழ விரும்புகின்றன. ஒரு மாத தனிமைப்படுத்தப்பட்ட காலம் தற்போது முடிவடைந்துள்ளது. ஆகவே, இன்னும் சில நாட்களில் அவை மக்கள் பார்வைக்காக காட்டப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே HIVதொற்று அதிகரிக்கும் அபாயம்: கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் பதிவு.

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்...

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...