இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உலகின் மிகப்பெரிய கேபிபரா எலிகள்! விரைவில் மக்கள் பார்வைக்கு

Date:

ஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து இலங்கைக்கு உலகின் மிகப்பெரிய எலி இனங்களில் ஒன்றான இரண்டு ஜோடி கேபிபராக்கள் (Capybara)அண்மையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த எலிகள் தொடர்பில் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் விலங்குகள் தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டும் என அவர் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கொறித்து உண்ணும் உயிரினங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த விலங்குகள் மிகவும் நட்புடன் இருப்பதாகவும், விலங்கு பரிமாற்றத் திட்டத்தின்படி, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு அவை கிடைக்கப்பெற்றன என குறிப்பிட்டார்.

தண்ணீருக்கு அருகில் வசிக்கும் இந்த கேபிபரா தனது சுவாசத்தை நீருக்கடியில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கும் திறன் கொண்டது என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

கேபிபராஸ் தாவரவகைகளை விரும்பி உணவாக எடுத்துக்கொள்கின்றன. இவை குழுக்களாக வாழ விரும்புகின்றன. ஒரு மாத தனிமைப்படுத்தப்பட்ட காலம் தற்போது முடிவடைந்துள்ளது. ஆகவே, இன்னும் சில நாட்களில் அவை மக்கள் பார்வைக்காக காட்டப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...