இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் அந்த நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு மேலதிகமாக, பாரிஸ் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் கரியமில வாயு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தில் பத்து பேர் கொண்ட குழுவொன்று இணைந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...