ஏறாவூரில் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று அனுஷ்டிப்பு!

Date:

1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ம் திகதி தமீழீழ விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லீம்களை நினைவுகூறும் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்படுகிறது.

பொதுச்சந்தை,வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு நூறுஸ்ஸலாம் பள்ளிவாயலில் துஆ பிராத்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டு அமைதிப் பேரணியும் இடம்பெற்றதுடன் நிகழ்வின் முடிவில் ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களிடம் சுஹதாக்கள் நினைவுப் பேரவையினால் மஹஜர் ஒன்றும் நகரசபை வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள்,உலமாக்கள்,கல்விமான்கள், ஊர்பிரமுகர்கள்,மத்ரஸா மாணவர்கள் என பெருந்திரளான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உமர் அறபாத்

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...