ஏறாவூரில் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று அனுஷ்டிப்பு!

Date:

1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ம் திகதி தமீழீழ விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லீம்களை நினைவுகூறும் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்படுகிறது.

பொதுச்சந்தை,வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு நூறுஸ்ஸலாம் பள்ளிவாயலில் துஆ பிராத்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டு அமைதிப் பேரணியும் இடம்பெற்றதுடன் நிகழ்வின் முடிவில் ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களிடம் சுஹதாக்கள் நினைவுப் பேரவையினால் மஹஜர் ஒன்றும் நகரசபை வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள்,உலமாக்கள்,கல்விமான்கள், ஊர்பிரமுகர்கள்,மத்ரஸா மாணவர்கள் என பெருந்திரளான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உமர் அறபாத்

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...