கடந்த 7 மாதங்களில் மேலும் 500 முதல் 600 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

Date:

இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் மொத்தமாக 11,900 விரிவுரையாளர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது 6,000 இற்கும் குறைந்த விரிவுரையாளர்களே இருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் பணிபுரியும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் 6,300 ஆகக் குறைவடைந்ததாகவும் கடந்த 7 மாதங்களில் மேலும் 500 முதல் 600 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டடுள்ளது.

விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அரச பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரமன்றி நாட்டிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பல்கலைக்கழகத்தில் 50 வீத வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், 2022ஆம் ஆண்டு புதிய மாணவர்களை இணைத்ததன் பின்னர் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...